Monday, April 12, 2010

கண்ணாமூச்சு ஏனடி ?












விண்ணிலிருக்கும் நிலவே
என்
விழியில் விழுந்து விட்ட
கனவு (தேவதை) நீ !
heart

புன்னகைக்கும் தாமரையில்
பூத்திருக்கும் தேன்
நீ !
heart

இசைத்திருக்கும் தமிழில்
இனித்திருக்கும் ஸ்ருதி
நீ !
heart

அடர்ந்த கானகத்தின்
படர்ந்திருக்கும் பசுமையும்
நீ!
heart

ஒளிந்திருக்கும் குழந்தையை
தொட்டு பிடிக்கும்போது உதிரும்
கள்ளமில்லா சிரிப்பு
நீ!
heart

தூக்கம் கெடுத்து கனவு தந்தாய்,
ஏக்கம் தொடுத்து நினைவு செய்தாய்,
உன் காதல் கொடுத்து, என் உயிர் கொய்தாய்,
நீ!
Innocent

சிந்தித்து பார்த்தேன், நீ தான் நிறைந்திருந்தாய்
சந்திக்க நினைத்தேன், ஒளிந்து மறைந்தாய்
சோர்ந்து போனேன்,
Crying
.
.
.
.
.
.
.
Love
வாழ்வில் வந்து மலர்ந்தாய்,
காதல் தேவதையாய்,
என் வாழ்க்கை துணைவியாய்!
Love

எதிரொலி











இன்று-
உணவகத்தில் சாப்பிடும் போதெல்லாம்
ஞாபகம் வருகிறது...... Oups

அன்று-
அம்மாவிடம் கோபித்து
உணவு வேண்டாம் என்று சென்ற
நாட்களெல்லாம்......... Crying

Wednesday, April 7, 2010

நாங்கள் இன்னும் வீழ்ந்து விடவில்லை

நாங்கள் வீறுகொண்டு எழ நாட்கள் இல்லை,
நல்ல நேரம் தேவையில்லை ,
இப்போது கூட நாங்கள் வீழ்ந்து விடவில்லை.

காற்றடிக்கும் போது ஆடும்
அகிலமெல்லாம் கிளை
விட்டிருக்கும் ஆல மரத்தின் இலை.
அதக்காக ஆல மரமே வீழ்ந்து விட்டது
என்று சொல்வது மடமை.

மேற்கே மறைந்திருக்கு சூரியன் தான் எங்கள் நிலை.
எப்போதும் இல்லாத நெருப்பு தணல்களோடு
மீண்டும் கிழக்கே வேங்கைகளாய் எழும் நேரமும் தூரமில்லை.

இப்போது ஆணவத்தோடு சிரித்துருப்பவர்களுக்கு ,
அப்போது புரிய வைப்போம் எங்கள் வீரத்தின் மகிமையை ....

அப்போது விண்ணையும் பிளக்கும்
எங்கள் "விர வேல் , வெற்றி வேல்" என்னும் முழக்கம்..

---எப்போதும் எங்கேயும் தமிழன் வினோ